கணபதி விழாப்பந்தல்களில் இரவு 9 ம ணிக்கும் ஆரத்தி எடுக்கலாம்
வருவான் ? அன்பும் அர்ப்பணிப்பும் இல்லாமல் இந்து மதம் வளருமா ?
இறையன்பு சிறிதும் இல்லாமல், சமூகத்தில் தலைமைப்
24 நவம்பர் 2009
மராட்டிய மண்ணின் மைந்தர் ராஜ் டாக்கரே அவர்கள் களமிறங்கி மராட்டியருக்காக போர்க்குரல் எழுப்புவது பற்றி செய்திகள் வந்த வண்ணம் இருக்கையில் புணே நகர நாளிதழ் "சகாள்" தனது நவம்பர் 23ந் தேதி செய்திகளில் (பக்கம் 5) தமிழ்நாட்டினர் பற்றி ஒரு செய்தி வெளியிட்டு நம்மை மகிழ்ச்சியில் திளைக்க வைத்துள்ளது.
செய்திக்குறிப்பின் தமிழாக்கம் இதோ;
தமிழ் "வார்கரி" யினரின் ஹரிநாம முழக்கம்
புணே அடுத்த ஆளந்தியில் ஞானேஸ்வர் சமாதியில் இன்று சுமார் 400 தமிழர் வார்கரி" என்று அழைக்கப்படும் மராட்டிய வழிபாட்டு ப்பாடல்களை ப்பாடி ஹரி நாமத்தின் ஒலி முழக்கம் செய்தனர்.
தமிழ்நாட்டில் இந்த "வார்கரி" என்ற வழிபாட்டு முறை நெடுங்காலமாக பஜனை, நாமசங்கீர்த்தனம் என்று கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் நமது தமிழ் சகோதரர்கள் ஆளந்தி, பண்டர்பூர், தேஹுக்ராமம், சாஸ்வத், என்ற புண்ணிய ஸ்தலங்களுக்கு வந்து தரிசனம் செய்து செல்கின்றார்கள். தூயவெள்ளாடை, அங்கவஸ்த்ரம், நெற்றியில் சந்தனம், கழுத்தில் துளசி மாலை என்று காட்சியளிக்கும் இந்த பக்தர்கள் ஆளந்தியில் ஒரு தர்மச்சத்திரத்தில் இரு நாட்களாக தங்கி வருகிறார்கள். தமிழ்நாட்டில் தஞ்சாவூர், கும்பகோணம், சீர்காழி ஆகிய ஊர்களில் இருந்து இவர்கள் வந்திருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் "போதேந்த்ர ஸ்வாமி" அவர்கள் அதிசயங்கள் நிகழ்த்தி பின் ஜீவசமாதி ஆனபடியால் அவர்களுக்கு மிக அதிக அளவில் சீடர்கள் உள்ளார்கள்.அங்கு இன்றும் காலையில் பூஜை, நாமசங்கீர்த்தனம் என்று சிரத்தையுடன் நடத்தி வருகிறார்கள்.
இரு நாட்களாக தங்கி வரும் இந்த பக்தர் குழு இன்று கோவிலைச்சுற்றி வந்து "ஹரே ராம, ஹரே க்ருஷ்ணா' என்று பரவசத்துடன் "அபங்க்" வகைப்பாடல்களைப்பாடினர்.இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் இதில் பலர் ஹிந்தி கூடத் தெரியாதவர் ஆவர். மராட்டி சுத்தமாகத் தெரியாதாம். இருப்பினும் நமது ஸந்த் துக்காராம் அவர்களின் கீர்த்தனைகளை எவ்வளவு அழகாகப்பாடுகிறார்கள்! . இந்த பக்தர்களிடம் இருக்கும் பாண்டுரங்கன் மீதான பக்திக்கு மொழி எந்தவிதத்தடையாகவும் இல்லை என்று
சொல்லத்தோன்றுகிறது.
மௌளி (ஞானேஸ்வர்) தரிசனம் எப்படி இருந்தது என்று விஷ்ணு என்ற பக்தரிடம் கேட்டபோது "பகவானின் அருளை நான் விவரிக்க இயலாது இருப்பினும் ஞானேஸ்வர் அவர்களின் சமாதி தரிசித்தபோது என் உடல் சிலிர்த்து உள்ளே ஏன்னவோ மாற்றங்கள் ஏற்பட்டதென்னவோ உண்மை. இது குருவின் மூலம் நான் அடைந்த பாக்யம் ஏனெனில் அவர்தான் என்னை இங்கு அழைத்து வந்தார்" என்று கூறினார்.
தஞ்சாவூரில் " சைதன்ய மஹாப்ரபு கல்விக்கூடம்" என்ற பெயரில் ஒரு ஆஸ்ரமம் இயங்கி வருகிறது. இங்கு வழக்கமான கல்வி தரப்பட்டு வருகிறது. இங்கு வரும் பக்தர்களிடம்
இறைவனின் நாமஸ்மரணை செய்யுங்கள் என்ற வேண்டுகோள் மட்டும் அவர்களிடம் கேட்கப்பட்டு வருகிறது. சமூகத்தில் எந்த வேறுபாடும் பார்க்காமல் மற்றவர்களின் நலத்துக்காக உழையுங்கள் என்ற வேண்டுகோளும் விடுக்கப்பட்டு வருகிறது என்று ஒரு பக்தர் கூறினார். பக்தர்கள் கூற்றுப்படி ஆங்காங்கே நடைபெறும் சம்ப்ரதாய பஜனை கீர்த்தனைகள் மட்டுமின்றி வேத பாடசாலைகளும் நடத்தப்பட்டு வருகின்ற செய்தியையும் இவர்கள் நம்மோடு பகிர்ந்து கொண்டார்கள்.
தமிழர்களிடம் ஹரே ராம ஹரே க்ருஷ்ணா என்ற மூலமந்திரம் மட்டுமின்றி அனேக "வார்கரி" வழக்கங்கள் இழையோடுவது இவர்களிடம் பேசும்போது தெரிகிறது. இதில் ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் சேர்ந்து பாடுகிறார்கள். ராதாக்ருஷ்ணரிடமும் பாண்டுரங்கரிடமும் ஆழ்ந்த பக்தியில் ஊறியவர்களாகக்காட்சியளிக்கிறார்கள். இந்த அடியார் திருக்கூட்டம் புண்யஸ்தலங்களை த் தரிசித்துக்கொண்டு பண்டர்பூர் நோக்கி தன் பக்திப்பயணத்தைதொடரும் என அறிகிறோம்.
இதுதான் நான் படித்தது. உங்களுடன் பகிர்ந்துகொண்டேன்.
வாழ்க "சகாள்" வளர்க உனது பணி!